இலங்கை சுதந்திரதினம் …சிங்களவருக்கானதே ..தமிழர்களுக்கானதல்ல….photo in..!

Spread the love

இலங்கை சுதந்திரதினம் …சிங்களவருக்கானதே ..தமிழர்களுக்கானதல்ல….!

பிரித்தானியாவிலுள்ள இலங்கை தூதரகம் முன்பாக நேற்று வெள்ளிக்கிழமை பெப்ரவரி 4ஆம் திகதி(04-02-2022) தமிழருக்கான சுதந்திர வேட்டைகாரர்கள் உடன் இணைந்து தமிழ் சொலிடாரிட்டி என்ற அமைப்பும்
ஒரு எழுச்சிப் போரட்டத்தை ஒழுங்கு செய்து நடத்தி இருந்தனர்.

இந்த ஆர்பாப்ட்டாத்தின் போது இலங்கையின் சுதந்திரதினமானது இலங்கை …சிங்களவருக்கானதே ..தமிழர்களுக்கானதல்ல…என்ற எதிர்ப்பை அழுத்தமாக தெரிவித்தனர்.


இந்த போராட்டாத்தின் போது புலம்பெயர் சமூகம் 13A திருத்த சட்டத்தை தீர்வாக ஏற்றுக்கொள்ள மறுத்துள்ளதாக தெரிவித்தனர்.


இலங்கை அரசு ஒழுங்கு செய்யும் சுதந்திரதினக் கொண்டாட்டங்களில் பங்கு பற்றுவோர் இலங்கையில் இருக்கும் அனைத்து
ஒடுக்கப்படும் மக்களுக்கும் விரோதிகளே என்றும் அவர்கள் தெரிவித்தனர்.


புலம்பெயர் மக்களின் ஆதரவு இருக்கு என்று பொய் சொல்லி எங்களது பெயரில் தமிழ் மக்களின் உரிமைகளை விற்பதை நாம் அனுமதிக்கப்போவதில்லை
எனவும் அழுத்தமாக தெரிவித்தனர்.

ஆர்பாப்ட்டாத்தின் போது போரட்டத்தை ஒழுங்கு செய்திருந்த போரட்டகாரர்களால்

*அரசியல் கைதிகளை உடனடியாக விடுதலை செய்.

*ஒற்றை ஆட்சியை நிராகரிபோம்

*13A தீர்வல்ல – நாம் கோருவது பிரிந்து போகும் உரிமை உட்பட்ட சுய நிர்ணைய உரிமை.

*நில ஆக்கிரமிப்பை உடனடியாக நிறுத்து.

*போராட்ட செயற்பாட்டாளர்கள் மேல் வன்முறை செய்வதை உடனடியாக நிறுத்து.


என்ற கோஷங்கள் முழங்க அழுத்தமாக கோஷமெழுப்பி தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர்.

Leave a Reply