இலங்கை கடற்படையினால் பானமவில் நிறுவப்பட்ட புதிய நீர் சறுக்கல்

Spread the love

இலங்கை கடற்படையினால் பானமவில் நிறுவப்பட்ட புதிய நீர் சறுக்கல்


பானமவில் ஒரு புதிய நீர் சறுக்கல் விளையாட்டு கிளப் இலங்கை கடற்படையினரால் நிறுவப்பட்டுள்ளது.

பானம கடற்கரையில் நிறுவப்பட்ட இந்த புதிய வசதிகள், தென்கிழக்கு கடற்படைப் பிராந்திய

கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் ஜயந்த கமகேவினால் இம்மாதம் 25ம் திகதி வைபவரீதியாக திறக்கப்பட்டதாக கடற்படை தகவல்கள் தெரிவிக்கின்றன.

இப்பகுதியில் நீர்சறுக்கள் விளையாட்டை ஊக்குவிக்கும் நோக்கில் நிறுவப்பட்டுள்ள இந்த

வசதிகள் கடற்படையின் வளம் மற்றும் நிபுணத்துவமிக்க ஆளணியினை பயன்படுத்துவதன் மூலம் கட்டமைக்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிழக்கு கரையோரத்தில் பானம ஒரு பிரபலமான சுற்றுலாத்தலமாகவும், நாட்டின் நீர் சறுக்கல் விளையாட்டிற்கு புகழ்பெற்ற இடமாகவும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

    Leave a Reply