இலங்கை இந்தியா உறவில் பாதிப்பில்லை இந்தியா அறிவிப்பு
இந்தியா, டில்லி ; இலங்கையில் புதிய ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில் இலங்கை தொடர்பாக இந்தியா கருத்துரைத்துள்ளது .
இலங்கை இந்தியாவுக்கு இடையில் வர்த்தக முதலீட்டு உறவுகள் சிறந்த முறையில் உள்ளதாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே தெரிவித்துள்ளார்.
இந்தியா முந்திக்கொண்டு இந்த விடயத்தை அறிவித்துள்ள முக்கிய விடயமாக பார்க்க படுகிறது.
இலங்கையில் புதிய ஜனாதிபதியை நியமிப்பதில் இந்தியா அமெரிக்கா கடும் போட்டிகளைமேற்கொண்டது .இதில் அமெரிக்காவே வெற்றி பெற்றுள்ளது எனப்படுகிறது.
அவ்வாறான வேளையில் இந்தியா இவ்விதம் இலங்கை தொடர்பாக தனது கருத்தை வெளியிட்டுள்ளமை முக்கியத்துவம் பெறுகிறது .