இலங்கையை சர்வதேச நீதிமன்றில் நிறுத்த வேண்டும் – சிறிதரன் பாய்ச்சல்
இலங்கையில் பாதிக்க பட்ட தமிழர்களுக்கு தீர்வினை வழங்கி இலங்கையை சிங்கப்பூராக மாற்றி
செல்ல வேண்டிய சூழலை மறந்து தற்போது இனவாதத்தை கக்கி தமது வாக்கு பெறும் நகர்வுகளை
நோக்கி செல்கின்றார்கள் ,தமிழர்களின் அடிப்படை அரசியலை புரிந்து கொள்ள ஆளும் சிங்கள அரசுகள் மறந்து வருகின்றன
இந்த தவறான பார்வை காரணமாக இலங்கையின் பொருளாதாரம் ,சமத்துவம் ,ஒற்றுமை என்பது
தவறி செல்கிறது ,இதனால் தமிழர்கள் தோற்று போனார்கள் என பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் தெரிவித்துள்ளார்
சர்வதேச விசாரணையில் இருந்து இலங்கை தப்பித்து கொண்டது ,ஆயினும் அதனை அடுத்த
கட்டத்திற்கு நகர்த்தி இலங்கையை சர்வதேச நீதிமன்றில் நிறுத்த பட வேண்டும் எனவும் ஸ்ரீதரன் தெரிவித்துள்ளார்
கூட்டமைப்பின் கடத்தி கொடுப்பு ,மற்றும் உள்ள அடி தடிகள் என்பனவற்றையும் இடித்துரைக்கின்றார்