இலங்கையில் கொரோனா மேலும் ஒருவர் உயிரிழப்பு

செட்டிநாடு மீன் குழம்பு இப்படி செய்ங்க உடனே காலியாகும்
Spread the love

இலங்கையில் கொரோனா மேலும் ஒருவர் உயிரிழப்பு

இலங்கையில் கொரோனா நோய் தொற்றுக்குள்ளான மேலும் ஒருவர் நேற்று உயிரிழந்தள்ளார்.

இதுதொடர்பாக அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கை பின்வருமாறு:

ஊடக அறிக்கை

பாணந்துறை ஆதார வைத்தியசாலையில் கடந்த 31ஆம் திகதி அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்த நோயாளியின் பிரேத

பரிசோதனையில் அவர் கொவிட் நோய் தொற்றுக்குள்ளானவர் என்று உறுதிசெய்யப்பட்டிருப்பதாக தொற்று நோயியல் பிரிவு சற்று முன்னர் அறிவித்தது.

உயிரிழந்த நபர் 27 வயது ஆண் ஆவதுடன் பாணந்துறை பிரதேசத்தைச்

சேர்ந்தவர். அத்துடன் இந்த மரணம் தற்கொலை முயற்சியினால் இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டது.

இது 22ஆவது கொரோனா நோய் தொற்றுக்குள்ளானவரின்; மரணமாக தொற்று நோயியல் பிரிவு உறுதிசெய்துள்ளது.

Leave a Reply