இலங்கைக்கு வந்தடைந்த பைசர் தடுப்பூசி

Spread the love

இலங்கைக்கு வந்தடைந்த பைசர் தடுப்பூசி

அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட 26910 (pfizer) பைசர் என்ற கொரோனா தடுப்பூசி மருந்து இன்று இலங்கைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

இன்று அதிகாலை 3.30 மணியளவில் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு கொண்டுவரப்பட்ட இவை அரச மருந்தக கூட்டுத்தாபனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

அமெரிக்காவிடமிருந்து இந்தத் தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ளும் முதலாவது தெற்காசிய நாடு இலங்கையாகும்.

இதன்கீழ் முதல் கட்டமாக இந்த தடுப்பூசி மருந்து இலங்கைக்கு கிடைத்துள்ளது.அடுத்த வாரம்

அளவில் மேலும் 26 ஆயிரம் பைசர் தடுப்பூசி மருந்து இலங்கைக்கு கிடைக்கவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.

இவற்றுக்கு மேலதிகமாக இரண்டு இலட்சம் பைசர் தடுப்பூசிகளும் இலங்கைக்கு கிடைக்க உள்ளன. கொரோனா நோய்த் தொற்றில் இருந்து பாதுகாப்பு பெற்றுக் கொள்வதற்காக ஒருவர்

இரண்டு பைசர் தடுப்பூசிகளை ஏற்றிக்கொள்வது அவசியமாகும். இதேவேளை இலங்கைக்கு

இம்மாத இறுதிக்குள் 64 ஆயிரம் அஸ்ராசெனகா மற்றும் கொவிஷில்ட் தடுப்பூசிகள் கிடைக்க உள்ளமை குறிப்பிடத்தக்கது

    Leave a Reply