இரு குழுக்கள் இடையில் மோதல் – 8 பேர் காயம்
கேகாலை, கோலிந்த வத்த பகுதியில் இரு குழுக்கள் இடையில் ஏற்பட்ட மோதலில் 8 பேர் காயமடைந்துள்ளனர்.
பெண் ஒருவர் உட்பட 8 பேர் காயமடைந்துள்ளதுடன் அவர்களில்
இருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இருகுழுக்களுக்கிடையில் பல நாட்களாக இருந்த பிரச்சினையின் காரணமாக இந்த மோதல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.