இராணுவ மயமாகும் இலங்கை – தமிழர்களை துரத்தும் சிங்கள உளவுத்துறை
இலங்கையில் தமிழின படுகொலையாளிகள் ஆட்சியில் ஏறினர் ,ஒன்று பட்ட நாட்டுக்குள் நல்லிணக்கத்தை ஏற்படுத்தி
,புலிகளினால் அடக்கி ஒடுக்க பட்ட தமிழர்களுக்கு அபிவிருத்திகளை
புரிந்து அவர்தம் வாழ்வில் ஒளியேற்றுவோம் என முழங்கினார்
அதற்காக இன ,மத பேதம் இன்றி மக்கள் ஆட்சி தொடரும் என சிவப்பு சால்வைகள் முழக்கமிட்டன ,
இவர்கள் பேச்சுக்களை மக்களும் நம்பிடத்தான் செய்தனர்
ஆனால் நடந்தது என்ன …? மக்கள் வீடுகள் முன்பாக சிங்கள உளவுத்துறையின்
நாடமாட்டம் ,வீடு சென்றே மிரட்டல் ,வெளியில் சொன்னால் கொலை
என தொடரும் சிங்கள இராணுவ வன்கொடுமை , அடக்குமுறைக்குள் மக்கள் சிக்கி தவித்து வருகின்றனர் .
செல்வந்தர்கள் ,அரசியல்வாதிகள் ,அவர்தம் ஆதரவாளர்கள் ,முன்னாள்
புலிப் போராளிகள் ,அவர்தம் தொடர்பாளர்கள் எனநீண்டு செல்கிறது பட்டியல்
அதுமட்டுமா ,,ஆளும் மக்கள் ஜனநாயக கட்டமைப்புக்குள் சிங்கள இராணுவ
அதிகாரிகள் நியமனம் ,இவை எதனை குறிக்கிறது ..?
மக்கள்
ஆட்சி தத்துவத்தை ஏற்றுள்ள இலங்கைக்குள் இன்று நடந்து கொண்டிருப்பது என்ன …?
கேள்வி கேட்பவன் கடத்த படுகிறார் ,அடக்க படுகிறான் ,அவன் கடத்தி முடக்க
படுகிறான் ,தொடரும் இந்த பவுத்த பேரினவாத சிந்தனைக்குள் சிக்கியுள்ள
கோத்தபாயவின் கொலை வெறி விரோதம் ,வஞ்சத்துடனேயே தமிழர்களை துரத்திய வண்ணம் உள்ளது
இதற்கு முடிவு கட்டுவது யார் ..?வாக்கு வங்கிகளை தமது பக்கம் வைத்துள்ள
மக்கள் தான் ,முடிவெடுங்கள் வரும் பாராளுமன்ற தேர்தலில் இவர்களை தோற்டியுங்கள் என்பதே நமது வாதமாகும் ,