இரவு தொடங்கி அதிகாலை வரை ஓடப்போகும் இ.போ.சபை பஸ்: வவுனியாவில் ஆரம்பம்

Spread the love

இரவு தொடங்கி அதிகாலை வரை ஓடப்போகும் இ.போ.சபை பஸ்: வவுனியாவில் ஆரம்பம்

வவுனியாவிலிருந்து திருகோணமலை ஊடாக மட்டக்களப்பு- பொத்துவில் மட்டும் இலங்கை போக்குவரத்து சபை பேரூந்துகள் முதன் முதலாக சேவையில் ஈடுபட்டுள்ளன.

இ.போ.சபை வவுனியா சாலையின் ஏற்பாட்டில் பயணிகளின் போக்குவரத்து வசதி கருத்தி இச் சேவை நேற்று (01.02) முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

மாலை 7.30 மணிக்கு வவுனியாவிலிருந்து புறப்பட்டு இரவு 9.45 மணிக்கு திருகோணமலையை அடைந்து இரவு 10.00

மணிக்கு திருகோணமலையிலிருந்து புறப்பட்டு மறு நாள் அதிகாலை 06.00 மணிக்கு பொத்துவில் பஸ் நிலையத்தை சென்றடையும்.

அதேபோல் இரவு 10.00 மணிக்கு பொத்துவிலிருந்து புறப்படும் இ.போ.சபை பேரூந்து மறுநாள் காலை 07.00 மணிக்கு வவுனியா வந்தடையும்.

இரவு தொடங்கி அதிகாலை வரை
இரவு தொடங்கி அதிகாலை வரை

Leave a Reply