ஆளில்லா ட்ரோன் கமராக்கள் மூலம் முகத்துவாரம், கல்கிஸ்ஸ பிரதேசங்கள் பொலிசாரினால் கண்கானிப்பு

Spread the love

ஆளில்லா ட்ரோன் கமராக்கள் மூலம் முகத்துவாரம், கல்கிஸ்ஸ பிரதேசங்கள் பொலிசாரினால் கண்கானிப்பு

கடற்படையின் துணையுடன், ஹெலிக்கொப்டர்கள், ஆளில்லா

ட்ரோன் கமராக்கள் போன்றவற்றைப் பயன்படுத்தி முகத்துவாரம், கல்கிஸ்ஸ பிரதேசங்களை பொலிசார் இன்று கண்காணித்துள்ளனர்.

இதுதொடர்பாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரான பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவிக்கையில் இந்தக் கண்காணிப்பில்,

கொவிட்-19 தொடர்பான தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறியதாக சந்தேகிக்கப்படும் ஏழு பேர் அவதானிக்கப்பட்டதாக தெரிவித்தார்.

இவர்களுக்கு எதிராக தனிமைப்படுத்தல் மற்றும் தொற்றுத் தடுப்பு கட்டளைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்.

தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களைச் சேர்ந்த மக்கள், தத்தமது வீடுகளில் தங்கியிருக்க வேண்டும் என கேட்டுக் கொள்வதாகவும்

பொலிஸ் ஊடகப் பேச்சாளரான பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன மேலும் கூறினார்.

Leave a Reply