ஆண்கள் பெறுமை இழந்தால் -இது நடக்கும்
கற்புக்கு பெண் என்று சொல்லாதே
காசிற்கு விற்கிறார் மறக்காதே
உவமைக்கும் இவரை காட்டாதே -இந்த
ஊத்தையில் கண்ணை வைக்காதே
பேருக்கு ஆனாய் இருக்காதே – இந்த
பேரிடரை பெண்ணுக்கு வழங்காதே
தன் பசி போக்க என் செய்வாள்
தன்னிடம் உள்ளதை விற்கிறாள்
கற்பிற்கு விலை வைக்கும் கறையானே
கண்ணீரை உறிஞ்சும் உதையோனே
வெப்பத்தை தூவி போகாதே – இந்த
வேட்கையில் பெண்ணை நீ கொல்லாதே
பூலன் தேவியாய் ஆக்காதே – இவள்
புலியாகி எழுவாள் மறக்காதே
எதை வந்து சொன்னாலும் ஏற்கேனே
ஏளன பெண்ணை மிதிப்பேனே
சிந்திக்கும் ஆற்றலை இழந்தாளை
சிந்தைக்குள் வைக்க முனையாதே
பானைக்குள் புகுந்த அகப்பைகள்
பாதியில் முறியும் மறவாதே
ஆண்கள் பெறுமை இழந்தால் -இது நடக்கும்
தோன்றுதல் பிறந்திட வேண்டும் என்றால்
தோலுக்குள் புகுந்திட வேண்டும்
அணைத்து பால் மலர்ந்திட வேண்டும் என்றால் – இந்த
ஆகமம் நடந்திட வேண்டும்
எதை வந்து சொன்னாலும் எற்கேனே
இந்த இழிசாதி பெண்ணை நம்பேனே
ஆணை கொல்லும் எமன் என்பேன்
ஆக்கினை இந்த பெண் என்பேன்
நூற்றுக்கு 90நூறு இழிவென்பேன்
நுண்ணறிவில்லா மலடென்பென்
ஆண்கள் பெறுமை இழந்துவிடின்
அத்தனை குடும்பமும் இரண்டென்பேன் ..!
வன்னி மைந்தன்
ஆக்கம் 19-09-2021