ஆணி வேர் ஒன்று அறுந்தது
உன் மக்கள் அவை காக்க
உரமேறி நின்றவா
தம் மக்கள் உனை காக்க
தவறியது ஏன் நண்பா
பின்னிருந்து இரு குண்டு
பிய்த்து நெஞ்சுடைக்க
மூச்சிழந்து போனாயே
முகவரி தொலைத்தாயே
காட்சிகள் இது ஒன்றாய்
காணொளியில் நீ இருக்க
வீச்சிழந்து போனவனே
வித்துடல் ஆனாயே
பேச்சிழந்து போவதற்கா
பேராசை நீ கொண்டாய்
அறுபத்தெட்டு அகவையில
ஆறடியில் ஏன் உறைந்தாய்
உன் துயரில் உலகெல்லாம்
உனை எண்ணி அழுகுதடா
உதயமாய் ஒளித்தவனே
உறக்கத்தில் ஏன் ஒளிந்தாய் ..!
வன்னி மைந்தன் ( ஜெகன் )
ஆக்கம் 08-07-2022
வன்னி மைந்தன் கவிதைகள்
08-07-2022 ஜப்பான் முன்னாள் பிரதமர் shinzo Ape சுட்டு கொலை செய்யப்பட்ட துயரில் வடித்தவை