அஸ்வெசும தொடர்பில் இலட்சக்கணக்கில் முறைப்பாடுகள்

காவல்துறையால் ஒருவர் சுட்டு கொலை
Spread the love

அஸ்வெசும தொடர்பில் இலட்சக்கணக்கில் முறைப்பாடுகள்

அஸ்வெசும நலன்புரி திட்டம் தொடர்பில் இதுவரையில் 4 இலட்சத்து 89 ஆயிரத்து 953 மேன்முறையீடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபையின் தலைவர் டீ.விஜேரத்ன குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், அஸ்வெசும நலன்புரி திட்டம் தொடர்பில் இதுவரையில் 6 ஆயிரத்து 783 ஆட்சேபனைகள் கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, எவரையும் கைவிடாத வகையில் ‘அஸ்வெசும’ திட்டத்தை முன்னெடுக்குமாறு ஜனாதிபதி அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கியுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு முன்னதாக அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.