அவுஸ்ரேலியா செல்ல முயன்ற 35 பேர் கைது

Spread the love

அவுஸ்ரேலியா செல்ல முயன்ற 35 பேர் கைது

பண்டுற ; இலங்கை கடல்வழியாக அவுஸ்ரேலியாவுக்கு படகு மூலம் செல்ல முற்பட்ட முப்பத்தி ஐந்து பேரை இலங்கை கடல் படையினர் கைது செய்துள்ளனர்.

இவ்வாறு கைதானவர்களில் 25 ஆண்கள் மற்றும் நான்கு பெண்கள் உள்ளிட்ட முப்பத்தி ஐந்துபேர் உள்ளடக்கம் பெறுகின்றனர் ..

பண்டுற பகுதியில் இடம்பெற்ற விசேட ரோந்து சுற்றிவளைப்பு தேடுதல் பணியின் பொழுதே இந்த கைது இடம்பெற்றுள்ளது .

இந்த படகில் செல்ல முற்பட்ட யாவரும் ஆறு முதல் ஐம்பத்தி ஆறு வயதுடையவர்கள் என கடல்படையினர் தெரிவிக்கின்றனர் .

அவுஸ்ரேலியா செல்ல முயன்ற 35 பேர் கைது

இவ்வாறு அவுஸ்ரேலியாவுக்கு கடல்வழியாக பயணிக்க முனைந்த இவர்கள் யாவரும் Trincomalee, Mannar, Batticaloa, Negombo, Kalpitiya and Nuwara Eliya பகுதிகளை சேர்ந்த நபர்கள் என கடல்படையினர் தெரிவித்துள்ளனர் .

கடல் வழியாக அவுஸ்ரேலியா சென்ற இலங்கையர்கள் கிறிஸ்மஸ்தீவில் அடைத்து வைக்க பட்டு அங்கிருந்து சிறப்பு விமானம் மூலம் இலங்கைக்கு நாடு கடத்த படுகின்றனர்.

இவ்வாறான சூழல் அவுஸ்ரேலியாவுக்கு தொடராக மக்கள் படையெடுத்த வண்ணம் உள்ளனர்.

    Leave a Reply