அரச ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
2024 வரவு – செலவுத் திட்டத்தில் அனைத்து ஊழியர்களின் சம்பளத்தை 20,000 ரூபாவினால் அதிகரிக்க கோரி முந்தல் பிரதேச செயலக ஊழியர்கள் இன்று (16) நண்பகல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
புத்தளம் – கொழும்பு பிரதான வீதியின் முந்தல் பிரதேச செயலகத்திற்கு முன்பாக நண்பகல் 12 மணி முதல் பகல் 1 மணி வரை இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
அரச ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
இதன்போது, “அரச ஊழியர்களின் மாதாந்த சம்பளத்தை 20 ஆயிரத்தால் அதிகரியுங்கள்”, ” எரிபொருள், சமையல் எரிவாயு, எரிபொருள் உள்ளிட்ட பொருட்களின் விலைகளை குறையுங்கள்” , “பொருட்களுக்கு விலைகளை
அதிகரிக்கும் போது இரச ஊழியர்களை கவனத்தில் கொள்ளுங்கள்” என்று இதுபோன்ற பல்வேறு சுலோகங்களை ஏந்தியவாறும், கோஷங்களை எழுப்பியும் அரச உத்தியோகத்தர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
- இராணுவவாகனம் மோதி யுவதி பலி
- இலங்கை வருகிறார் எலோன் மஸ்க்
- சிக்கிய திருட்டு கும்பல்
- நாட்டில் உற்பத்தி நடவடிக்கைகளில் பின்னடைவு
- ரஷ்யாவுக்கான இலங்கைத் தூதுவர் யார்
- அதிசய வேம்பு பார்க்க வரும்மக்கள்
- மாணவனை தாக்கிய பொலிஸ்
- மந்திரவாதியால் பெண் படுகொலை
- ஒரேகுடும்பத்தை சேர்ந்த மூவர் கொலை
- மண்சரிவு அபாய எச்சரிக்கை