அரச அதிகாரிகளின் செயற்பட்டால் கண்ணீர் விட்டழும் இரு நேரம் உணவு உண்டு வாழும் தோணிக்கல் மக்கள்

Spread the love

அரச அதிகாரிகளின் செயற்பட்டால் கண்ணீர் விட்டழும் இரு நேரம் உணவு உண்டு வாழும் தோணிக்கல் மக்கள்

வவுனியா தோணிக்கல் கிராம சேவையாளர் பிரிவில் நலன்புரி உதவித்திட்ட கொடுப்பனவு தெரிவில் முறைக்கேடுகள் இடம்பெற்றுள்ளதாகவும், இரு நேரம் மட்டும் உணவு உண்டு வாழும் குடும்பங்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளதாகவும் கிராம மக்கள் கண்ணீர் மல்க ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

குறித்த ஆர்ப்பாட்டம் தோணிக்கல் ஐயா வாசியசாலை முன்பாக இடம்பெற்றது.

அரசாங்கத்தினால் நலன்புரி உதவித்திட்ட கொடுப்பனவுகள் வழங்குவதற்கான பெயர்ப்பட்டியல் அண்மையில் வெளிவந்திருந்த நிலையில் வவுனியா தோணிக்கல் கிராம சேவையாளர் பிரிவில் வசிக்கும் இரு நேரம் உணவு உண்டு வாழும் குடும்பங்கள், விசேட தேவைக்குட்பட்டவர்கள், முதியோர்கள், விதவைகள் உட்பட்ட வறுமைக்கோட்டிற்கு உட்பட்டவர்களின் பல பெயர்கள் உள்வாங்கப்படாமல் வெளிநாடுகளில் இருப்போர் மற்றும் வசதியானவர்களுக்கே கொடுப்பனவுகள் வழங்கப்படவுள்ளதாக தெரிவித்து பாதிக்கப்பட்ட கிராம மக்கள் ஆர்ப்பாட்டத்தின் போது தெரிவித்தனர்.

அரச அதிகாரிகளின் செயற்பட்டால் கண்ணீர் விட்டழும் இரு நேரம் உணவு உண்டு வாழும் தோணிக்கல் மக்கள்

போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,

எமது கிராமத்திலுள்ள பாதிக்கப்பட்டவர்களில் 70 சக வீதமானவர்களின் பெயர்கள் உள்வாங்கப்படவில்லை. மேலும் வெளிநாடுகளில் இருப்போர், வசதியானவர்களுக்கே கொடுப்பனவுகளின் பெயர்பட்டியல் வந்துள்ளன. இதனை கேட்க சென்றால் கிராம சேவையாளர், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் என பலரும் அசண்டையீனமாக பதிலளிப்பதுடன் எமது நியாயமான கோரிக்கைகளையும் செவிமடுப்பதில்லை.

மேலும் அபிவிருத்தி உத்தியோகத்தர் பெரியவர்கள், முதியவர்கள் எனப் பாராது மரியாதை இன்மையாகவும் கதைக்கின்றார். எமது கிராமத்தில் உண்மையில் கஸ்டப்படுவர்களுக்கு எவ்வித உதவிகளும் கிடைப்பதில்லை என தெரிவித்து கண்ணீர் மல்கி தமது ஆதங்கத்தினை தெரிவித்ததுடன், தமக்கு தீர்வினை பெற்றுத்தருமாறும் கோரினர்.