அமெரிக்க தூதுவர் – பிரதமர் மகிந்தவுக்கு இடையில் சந்திப்பு
இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் அலைனா டெப்லிட்ஸ் மற்றும் பிரதமர்
மஹிந்த ராஜபக்ஷவுக்கிடையில் சற்திப்பு இடம்பெற்றுள்ளது.
இந்த சந்திப்பு இன்று (05) காலை கொழும்பு, விஜேராம மாவத்தையில்
அமைந்துள்ள பிரதமரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இச்சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
கொவிட் -19 உலகளாவிய தொற்றுநோய்க்கு எதிராக முன்னெடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து இச்சந்திப்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
அத்தோடு குறிப்பாக பொருளாதார தாக்கங்கள் மற்றும் கூட்டு ஒத்துழைப்பு
தொடர்பில் பிரதமருக்கும், அமெரிக்கத் தூதுவருக்கும் இடையில் கருத்துப் பரிமாற்றங்கள் இடம்பெற்றுள்ளன.