அமெரிக்கா தூதர்-காணாமல் ஆக்கப்பட்டோர் சந்திப்பு
வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்க
பிரதிநிதிகள் இன்றைய தினம் அமெரிக்கத் தூதுவர் ஜீலி சுங்கினை சந்தித்து கலந்துரையாடினர்.
நேற்று மதியம் 12 மணியளவில் கொக்குவிலில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் இந்த சந்திப்பு இடம்பெற்றது.
சந்திப்புக்கு பின்னர் வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின்
உறவுகளின் சங்க செயலாளர் லீலாதேவி ஆனந்த நடராஜா கருத்து தெரிவிக்கையில்,
எமது உறவுகள் காணாமலாக்கப்பட்ட விதம், எமது போராட்டங்கள், எமக்குள்ள பிரச்சினைகள் தொடர்பாக அமெரிக்க
தூதுவரிடம் நாம் விளக்கிக் கூறி இருந்தோம் என தெரிவித்தார்