![அமெரிக்காவை தாக்கிய புயல் 11பேர் மரணம் 60 பேர் காயம்](https://www.ethiri.com/wp-content/uploads/2024/05/ozens-injured-after-25-tornadoes-tear-through-5-states-officials-say-620x310.jpg)
அமெரிக்காவை தாக்கிய புயல் 11பேர் மரணம் 60 பேர் காயம்
அமெரிக்காவை தாக்கிய புயல் 11பேர் மரணம் 60 பேர் காயம் என தெரிவிக்க பட்டுள்ளது .
உலக வல்லரசு அமெரிக்காவினை தாக்கி வரும் கடும் புயல் மற்றும் கன மழை காரணமாக 11 பேர் பலியாகியுள்ளனர் ,மேலும் 60 க்கு மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர் .
டெக்சாஸ், ஓக்லஹோமா, ஆர்கன்சாஸ், மிசோரி ஆகிய இடங்களில் சூறாவளியால் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது .
திடீர் சூறாவளியால் ஐந்து மாநிலங்கள் பாதிப்பு
இந்த சூறாவளியால் ஐந்து மாநிலங்கள் பாதிக்க பட்டுள்ளன .இதே பகுதிகளில் 25 சூறாவளி தாக்குதல்கள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்க படுகிறது .
பாதிக்க பட்ட பகுதிகளில் மீட்பு பணிகள் இடம்பெற்று வருவதுடன் ,மக்கள் தாற்காலிக ,இடை தங்கள் நிலையங்களில் தங்க வைக்க பட்டுள்ளதாக அந்த மாநில அரசுகள் அறிவித்துள்ளன .
சூறாவளியால் 100 க்கு மேற்பட்ட வாகனங்கள் சேதம்
திடீர் சூறாவளியால் 100 க்கு மேற்பட்ட வாகனங்கள் மற்றும் வீடுகள் என்பன சேதங்களுக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது .
சீராற்ற காலநிலை காரணமாக அமெரிக்காவாவில் இயல்பு நிலை பாதிக்க பட்டதுடன் ,கடும் சூறாவளி புயல் காரணமாக பெரும் சொத்து இழப்பு ஏற்பட்டுள்ளது .
வீடுகளின் கூரைகளை அடித்து சென்ற சூறாவளி
மக்களது வீடுகளின் கூரைகள் சூறாவளியில் அடித்து செல்ல பட்டுள்ள காட்சிகள் வெளியாகியுள்ளன .
இந்த திடீர் சூறாவளி புயல் காரணமாக ,அமெரிக்காவின் ஐந்து மாநிலங்கள் கடுமையாக பாதிக்க பட்டுள்ளன .
அவ்விதம் புயலினால் பாதிக்க பட்ட பகுதிகளின் மொத்த சொத்து இழப்பு தொடர்பான கணக்கறிக்கை தயாராகி வருகிறது .
இவ் ஆண்டில் அமெரிக்காவில் ஏற்பட்ட அதி உச்ச சூறாவளி புயல் இதுவாக காணப்பட்டுள்ளது என்கின்ற புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன .
ஜனாதிபதி ஜோ பைடன் அனுதாபம்
ஜனாதிபதி ஜோ பைடன் புயலினால் பாதிக்க பட்ட மக்களுக்கு அனுதாபம் தெரிவித்துள்ளதுடன் ,கோர புயலினால் பாதிக்க பட்ட பகுதிகளுக்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ளும் படியும் அறிவுறுத்தல் விடுத்துள்ளார் .
ஜோ பைடன் சிக்கினார்
ஜனாதிபதி ஜோ பைடன் தேர்தலை எதிர்கொண்டுள்ள இவ்வேளையில் ,சீரற்ற காலநிலை புயலினால் பாதிக்க பட்ட மக்களுக்கு உரிய முறையில் தீர்வை வழங்கினால் மட்டுமே ,அவரினால் மகத்தான வெற்றியை பெற முடியும் என்ற நிலை காண படுகிறது .
அதனால் புயலினால் ஏற்பட்ட மக்கள் இழப்பை, அரசு செலுத்த வேண்டிய நிலைக்கு செல்ல கூடும் என எதிர் பார்க்க படுகிறது .