அமெரிக்காவில் கோர விபத்து 7 பேர் உடல் சிதறி மரணம்
அமெரிக்கா சிக்காக்கோ பகுதியில் ஏற்பட்ட வாகன விபத்தில் சிக்கி ஏழுபேர் பலியாகியுள்ளனர்
கார் மாற்றும் வான் என்பன நேரெதிர் மோதியதால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது .
இரண்டு வாகனங்களும் மோதிய வேளையில் கார் வெடித்து தீ பற்றி கொண்டது .
ஐந்து சிறுவர்கள் உள்ளிட்ட ஏழுபேர் பலியாகியுள்ளனர்.
சிறுவரக்ளை ஏற்றிய வண்ணம் காரை ஓட்டி சென்ற பெண் தவறான வழியூடாக காரினை செலுத்தி சென்ற நிலையில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
ஏன் இவ்வாறு தவறான வழியின் ஊடாக சிறுவர்களுடன் காரினை செலுத்தி சென்றார் என்பது தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன .
காயமடைந்த இருவர் உலங்குவானூர்தி மூலம் மருத்துவ மனைக்கு எடுத்து செல்ல பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்க பட்டுள்ளனர் .
அமெரிக்காவில் இடம்பெற்ற இந்த கோர விபத்து பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது .