அனைத்து விமான நிறுவனங்களும் மீண்டும் இலங்கைக்கான விமான சேவையை ஆரம்பிக்க இணக்கம்
கொவிட் தொற்றுக்கு முன்னர் பயணிகள் விமான சேவையை மேற்கொண்ட அனைத்து சர்வதேச விமான நிறுவனங்களும்
மீண்டும் இலங்கைக்கான விமான சேவையை ஆரம்பிப்பதற்கு இணக்கம் தெரிவித்துள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
சுற்றுலா பயணிகளுக்காக மீண்டும் நாடு திறக்கப்படுவதை உத்தியோகபூர்வமாக
அறிவிக்கும் வைபவத்தில் உரையாற்றுகையிலேயே அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அமைச்சர் மேலும் தெரிவிக்கையில், அடுத்த 6 மாதங்களில்
சுற்றுலா பயணிகளின் வருகை இயல்பு நிலைக்கு திரும்பும் என்று எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்துள்ளார்.