அனைத்து பாடசாலைகளிலும் இன்று முதல் கல்வி நடவடிக்கைககள் வழமைக்குத் திரும்பின.
நாட்டில் ஏற்பட்ட கொரோனா வைரஸ் தொற்று காரணமாக மூடப்பட்ட
அனைத்து பாடசாலைகளிலும் இன்று (08) முதல் கல்வி நடவடிக்கைககள் வழமைக்குத் திரும்பியுள்ளன.
இதனடிப்படையில், காலை 7.30 மணி முதல் பகல் 1.30 மணி வரை வழமையான
நேரத்தில் கல்வி நடவடிக்கைகள் நடைபெறும் என கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.
எனினும், பாடசாலைகளில் மாணவர்கள் சுகாதார நடைமுறைகளை
தொடர்ச்சியாக பின்பற்ற வேண்டும் எனவும் கல்வி அமைச்சு வலியுறுத்தியுள்ளது.
கொரோனா தொற்று காரணமாக விடுமுறை வழங்கப்பட்ட அனைத்து
அரச பாடசாலைகளிலும் கடந்த 10 ஆம் திகதி முதல் கட்டம் கட்டமாக கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டன.