அனைத்து பல்கலைக்கழகங்களும் இன்று முதல் மீண்டும் ஆரம்பம்

Spread the love

அனைத்து பல்கலைக்கழகங்களும் இன்று முதல் மீண்டும் ஆரம்பம்

நாட்டின் அனைத்து பல்கலைக்கழகங்களையும் இன்று முதல் மீளத் திறப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக

மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் சிரேஷ்ட பேராசிரியர் சம்பத் அமரதுங்க அறிவித்துள்ளார்.

மருத்துவ பீடங்களின் இறுதி வருட பரீட்சை வெற்றிகரமாக நிறைவுபெற்றுள்ளது. கடந்த காலங்களில் இணையத் தளத்தைப்

பயன்படுத்தி மாணவர்களுக்கு போதிக்கப்பட்டது. தடைகளுக்கு மத்தியிலும் மாணவர்கள் இணையத் தள கற்கைகளில்

பங்கேற்றதாக அவர் குறிப்பிட்டார். விடுதிகளில் இதுவரை ஓர் அறையில் ஒருவர் தங்குவதற்கான வசதி செய்து கொடுக்கப்பட்டது.

இதன் பின்னர் அந்த வரையறையில்லாமல் வழமைபோன்று பல்கலைக்கழக நடவடிக்கைகள் முன்னெடுத்துச் செல்லப்படும்.

இதனிடையே, களனி பல்கலைக்கழகத்தின் கல்வி நடவடிக்கைகள் நாளை மறுதினம் மீண்டும் ஆரம்பிக்கப்படும் என, களனி

பல்கலைக்கழகத்தின் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது. இதற்கமைய, விடுதி வசதியை பெற்றுக்கொண்டுள்ள மாணவர்கள் நாளை

மாலை 5 மணிக்கு முன்னராக விடுதிக்கு வருகை தர வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

      Leave a Reply