அதிகார சமநிலை அளவுக்கு மீறினால் அது நாட்டுக்கு பயனுள்ளதாக அமையாது

Spread the love

அதிகார சமநிலை அளவுக்கு மீறினால் அது நாட்டுக்கு பயனுள்ளதாக அமையாது

நல்லாட்சி அரசாங்கம் அறிமுகம் செய்த 19ஆவது அரசியல் அமைப்பு திருத்தத்தின் மூலம் நாட்டின் எந்தவொரு தரப்பிற்கும்

நன்மைகள் கிடைக்கவில்லை என்று கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்தார்.

20ஆவது அரசியல் யாப்பு திருத்தம் மீதான விவாதம் இரண்டாவது நாளாக தற்பேபது பாராளுமன்றத்தில் நடைபெறுகிறது.

விவாதத்தில் கலந்து கொண்ட கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ், 19ஆவது திருத்தத்தின் கீழ் பல்வேறு தரப்புக்கள் மீதும்

பொறுப்புக்கள் சுமத்தப்பட்டாலும், அவர்களுக்கு பொறுப்பை நிறைவேற்றுவதற்கான அதிகாரம் கிடைக்கவில்லை. மக்கள்

பெரும் எதிர்பார்;ப்புடன் வழங்கிய ஆணையை நிறைவேற்றுவதில் இது பெரு தடையாக அமைந்துள்ளது.

50 சதவீத பங்குகளைக்கொண்ட அரசு சார் நிறுவனங்களில் கணக்காய்வாளருக்கு உள்ள அதிகாரத்திற்கு பாதிப்பு ஏற்படாதவகையிலேயே நாம் தற்போது நடவடிக்கை

மேற்கொண்டுள்ளளோம். அதிகார சமநிலை குறித்து எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ குறிப்பிட்hர். அதிகார சமநிலை அளவுக்கு மீறினால் அது நாட்டுக்கு பயனுள்ளதாக அமையாது

பொறுப்புக்களை நடைமுறை ரீதியில் அமுல்படுத்த 19ஆவது அரசியல் அமைப்பின் கீழ் அதிகாரங்கள் வழங்கப்படாமை

சிக்கலானதாகும் என்றும் கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் மேலும் தெரிவித்தார்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ:
20ஆவது அரசியல் அமைப்பு திருத்தத்தின் மூலம் அதிகார சமநிலை ஏற்படுத்தப்பட வேண்டும். ஆனால், இந்த திருத்தமானது, தனி

நபர்களை மையமாகக் கொண்ட அதிகார போராட்டத்தின் ஒரு பகுதியாக காணப்படுகிறது. சரியான அரசியல் இலக்குகள்

அற்றவர்களே 19ஆவது அரசியல் அமைப்பு திருத்தத்திற்கு அஞ்சுகின்றனர்.

Leave a Reply