அசிட்டை அருந்தியவர் உயிரிழப்பு

Spread the love

அசிட்டை அருந்தியவர் உயிரிழப்பு

சாராயமென நினைத்து, லொறியின் பெட்டரி அசிட்டை (அமிலம்) அருந்திய இரண்டு பிள்ளைகளின் தந்தை உயிரிழந்துள்ளதாக, காலி கராப்பிடிய போதனா வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

காலி – படதுவ பூர்வாராம மாவத்தையைச் சேர்ந்த (53 வயது) கராஜில் வேலை செய்யும் நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

லொறியின் பெட்டரி அசிட்டை மாற்றுவதற்காக லொறியின் உரிமையாளரும் இன்னும் இருவரையும் அழைத்துக்கொண்டு கராஜ்ஜுக்கு சென்றுள்ளனர். அங்கு சென்ற இவர்கள், சட்டவிரோதமாகத் தயாரிக்கப்பட்ட சாராய போத்தலையும், அசிட் போத்தளையும் எடுத்துக்கொண்டு வந்துள்ளனர்.

லொறியின் பெட்டரியை சார்ஜ் செய்துவிட்டு, அவர்கள் வாங்கி வந்த மதுபானத்தை அருந்தியுள்ளனர். இதன்போது எதிர்பாராத விதமாகத் தவறுதலாக அசிட்டை சாராயமென நினைத்து சோடாவுடன் கலந்துள்ளார்கள்.

இதனை, அருந்திய லொறியின் உரிமையாளர் காலி கராபிடிய போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் உயிரிழந்துள்ளார். அசிட்டை அருந்தியதாலேயே இவர் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட மரண பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

Leave a Reply