வீதியில் மீட்கப்பட்ட சிசுவின் சடலம்
மஹியங்கனை – தெஹியத்தகண்டிய பிரதான வீதியின் கிராந்துருகோட்டை பிரதேசத்தில் புதிதாகப் பிறந்த சிசு ஒன்றின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
அவ்வழியாக சென்ற ஒருவர் சடலத்தை பார்த்து பொலிசாருக்கு தகவல் வழங்க நடவடிக்கை எடுத்துள்ளார்.
பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த கிரந்துருகோட்டை பொலிஸ் நிலைய அதிகாரிகள், விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
வீதியில் மீட்கப்பட்ட சிசுவின் சடலம்
சடலம் மீட்கப்பட்ட போது அழுகிய நிலையில் இருந்ததால், சடலத்தை யாராவது அவ்விடத்தில் வீசிவிட்டு தப்பிச் சென்றிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
சடலம் கண்டெடுக்கப்பட்ட இடத்திற்கு அருகில் ஒரு பாடசாலை மற்றும் பேருந்து நிறுத்தமும் உள்ளதுடன் கருப்பு நிற பயணப்பையொன்றும் காணப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் இதுவரையில் உறுதியான தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை என்பதுடன், கிராந்துருகோட்டை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
- இலங்கையில் அதிகரிக்கும் படுகொலைகள்
- மியன்மாரில் சிக்கிய இலங்கையர்
- தீபச்செல்வன் விசாரணை வலயத்தில்
- தமிழருக்கு எதிரானது பயங்கரவாத தடைச் சட்டம்
- மன்னர் ஆயரை சந்தித்தார் ரணில்
- தவறிவிழுந்து வெளிநாட்டுப் பெண்
- தடம் புரண்ட பிரதான ரயில்
- பெண் மீது துப்பாக்கிச் சூடு
- வீதிக்கு வந்த அனந்தி
- இலங்கை தலையில் சர்வதேச நாணய நிதியம் குட்டு
- கல்வி முறையில் மாற்றம் ரணில்
- யாழில் மனித சடலம் மீட்பு