விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையில் 98 பேர் கைது
மேல் மாகாணத்தில் முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையில் 98 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
நேற்று (29) காலை 06 மணிமுதல் இன்று (30) அதிகாலை 05
மணிவரையான காலப்பகுதியில் இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இவர்களில் 42 பேர் ஹெரோய்ன் போதைப்பொருளுடன் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
கஞ்சா வைத்திருந்த 06 பேர், சட்டவிரோத மதுபானங்களுடன் 37 பேர், கோடா வைத்திருந்த 06 பேர் மற்றும் ஏனைய
குற்றச்சாட்டுகளில் 07 பேர் கைதுசெய்யப்பட்டள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.