வரணி மருத்துவ மனையில் அடாவடி – குமுறும் மக்கள் – கண்டுகொள்ளாத கேதீஸ்வரன்
யாழ்ப்பாணம் வரணி ஆதார வைத்தசிய சலையில் மருத்துவர் ,மற்றும் அங்கு பணி புரியும் தாதிமார்கள் தொடர்பில் மக்கள் முறைப் பாடுகளை புரிந்து வருகின்றனர்
இரண்டு மணிக்கு பின்னரே மக்கள் பொது நோயாளர் பார்வை இடம் பெறுகிறது ,இவையும் மட்டு படுத்தப்பட்ட ஒன்றாக உள்ளது
அதிக நோயினால் பீடிக்க பட்டு அவசர சிகிச்சைக்கு அழைத்து வர படும் நோயாளர்கள் திருப்பி அனுப்ப படுகின்றனர்
இந்த மருத்துவ மனையின் பொறுப்பு வாய்ந்த மருத்துவர் இரண்டு மூன்று மணித்தியாலங்கள் பணியினை செய்து வீட்டுக்கு
சென்று விடுகிறார் ,அதன் பின்னர் தாதிமார்களே நோயாளர்களை பார்வை இடுகின்றனர் ,ஆனால் சம்பளத்தை முழு நாள் வேலை புரிந்த கணக்கில் பெற்று விடுகின்றனர்
இதில் ரதி மோகன் வசந்தராணி என்ற குடும்ப நல உத்தியோகஸ்தர் மக்கள் மீதி எரிந்து விழும் செயல் பாடுகளில் ஈடுபட்டுள்ளார் .
மகாப்பேறு தாய் சிசுவை கிராமங்கள் தோறும் சென்று அவர்கள் நிறையினை அளவீடு செய்திட வேண்டும் .
அப்போது தாய் ,சிசு இருவரையும் ஒன்றாக தராசில் ஏற்றி நிறுத்து பிள்ளையின் நிறையை கழித்து ,பின்னர் தாயின் நிறையினையும் பதிவு செய்யும் சம்பவகள் அதிகரித்துள்ளது
இங்கு கடும் நோயினால் பாதிக்க பட்டு சிகிச்சை பெற வந்த கர்ப்பிணி பெண் மற்றும் நோயாளி ஒருவருக்கு இவர்கள் சிகிச்ச
வழங்க மறுத்ததன் விளைவால் மந்திகை மற்றும் யாழ்ப்பாணம் எடுத்து செல்லும் பொழுது இடை வெளியில் இறந்து விட்ட துயர சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன
இந்த செயல் பாடுகளை கண்டு கொள்ள மறுக்கும் பொறுப்பு நிலை பிராந்திய அதிகாரி கேதீஸ்வரன் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்வதில்லை என்ற குற்ற சாட்டு முன் வைக்க படுகிறது
இது விடயம் தொடர்பில் அவருக்கு தெரிவித்து அவர் கருத்தை கேட்க முனைந்து அழைப்பை ஏற்படுத்திய பொழுதும் எமது அழைப்பிற்கு பதில் தர அவர் மறுத்துவிட்டார்
இவ்வாறு தான் செல்கிறது இன்றைய வடபுலத்தில் அரச கட்டுமான பணிகளில் உள்ள நிலைகள் ,இதனை வடக்கு ஆளுநர் அம்மணி
கவனத்தில் கொண்டு இந்த மக்கள் பிரச்சனைக்கு உடனடி தீர்வை காண்பாரா ..?
மக்களுக்கு உதவி செய்திட வருவதாக கூறும் வடக்கு ஆளுநர் இந்த சிக்கலான நிலைகளுக்கு தீர்வு காண்பாரா என்பதே மக்களின் ஏக்கமாக உள்ளது ,
சில தமிழர் எம்பிக்களும் இது விடயம் குறித்து தெரிவிக்க பட்ட பொழுதும் அவர்களும் இது விடயத்தில் நடவடிக்கை எடுக்காது ,இருப்பது அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது
தொடரும் இந்த நிலைக்கு தீர்வு என்ன ..பாதிக்க படும் மக்களே இரகசியமாக காணொளி பிடித்து அனுப்பி வையுங்கள்
வெள்ளையர் ஊடகம் வரை இந்த செய்திகளை எடுத்து சென்று சர்வதேசத்தில் இலங்கை மருத்துவ துறையினம் கீழ்த்தரமான செயலை அம்பல படுத்துவோம்