முறிந்த மரம் தப்பிய மக்கள்
பெய்து வரும் அடை மழையுடன், பெரகல – வெள்ளவாய ஏ4 வீதிக்கு கீழே பிளாக்வுட் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (08) காலை பாரிய மண்மேடு சரிந்து வீழ்ந்தமையினால் குறித்த வீதியின் போக்குவரத்து முற்றாக தடைப்பட்டுள்ளதாக ஹப்புத்தளை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
காலை 8 மணியளவில் வீதியில் மண்மேடு சரிந்து வீழ்ந்த போது அவ்வழியாக மோட்டார் சைக்கிளில் பயணித்த பலர் 99இல் தப்பியுள்ளனர் என்றும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
முறிந்த மரம் தப்பிய மக்கள்
வீதியில் பாறைகள் மண் மேடு சரிந்து வீழ்ந்துள்ளமையினால் குறித்த வீதியின் பகுதி நூறு அடிக்கு மேல் முற்றாக தடைப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
பண்டாரவளை- எல்ல -வெல்லவாய வீதி மாற்று வீதியாக பயன்படுத்துமாறு மண்சரிவு அபாயம் உள்ளதால் வாகனங்களை அவதானமாக செலுத்துமாறு சாரதிகளிடம் பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் மாற்றுப் வீதியாக ஹலத்துதென்ன கிராவணகம நிகபோத ஊடாக வெல்லவாய செல்லும் குறுகிய வீதியையும் பொலிஸார் அறிமுகப்படுத்தியுள்ளனர்.
- நந்திக்கடலில் ரவிகரன் அஞ்சலி
- முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் அனுஷ்டிப்பு
- அரச துறையில் ஊழல் மோசடி
- மழையுடனான வானிலை வௌ்ள அபாயம்
- மாற்றுத்திறனாளிகள் எதிர்கொள்ளும் சவால்கள்
- பொது வேட்பாளரை ஆராய்கிறோம் டெலோ
- ரஷ்ய போரில் பங்கெடுத்திருக்கும் இலங்கையர்கள்
- யாழில் கொலை செய்யப்பட்ட பெண்
- ஆயிரம்போதை மாத்திரைகளுடன் ஒருவர் கைது
- பாடசாலை மாணவர்களின் வருகை அதிகரிப்பு