புதுடெல்லியில் நிலநடுக்கம்
இந்திய தலைநகர் புதுடெல்லியில் சிறிய அளவில் நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. நேற்று (11) பிற்பகல் 3.36 மணியளவில் நில அதிர்வு உணரப்பட்டுள்ளது.
நில அதிர்வு ரிக்டர் அளவுகோலில் 2.6 ஆக பதிவாகியுள்ளது.
இந்த நில அதிர்வு வடக்கில் பூமிக்கு அடியில் 10 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டுள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
இதனால் எவருக்கும் எவ்வித பாதிப்புகளும் ஏற்படவில்லையென தகவல் வெளியாகியுள்ளது.