பிரிட்டனில் 7,500 பேர் பலி- செத்து மடியும் வயோதிபர்கள்
பிரிட்டனில் வயோதிப மடங்களில் பிள்ளைகளினால் கைவிட பட்ட நிலையில் வசித்து வந்த சுமார் 7,500
பேர் கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி பலியாகியுள்ளனர் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது
3,084 வயோதிபர்கள் பராமரிப்பு நிலையங்கள் கொரனோ நோயின் தாக்குதலுக்கு சிக்கின,
இதில் 214 நிலையங்கள் பலமாக பாதிக்க பட்டன ,கடந்த மாசி ஐந்தாம் திகதி வரையிலான புள்ளி விபரங்கள் இந்த பலி
எண்ணிக்கியாகும் ,அதன் பின்னர் இதே சரி தொகையில் இறந்திருக்கலாம் என தெரிவிக்க படுகிறது
பிரிட்டனில் குறித்த நோயில் சிக்கி வயோதிபர்கள் பலியாகி வருகின்றனர் என்ற செய்தி கசிய விடப் பட்டதன் பின்புலத்தில் இந்த விடயம் மறைந்துள்ளதும் அவை இப்பொழுது வெளியிட பட்டுள்ளது
அரசு முன்னரே மக்கள் இறந்த விடயத்தை தெரிந்து வைத்து படிப்படியாக இப்பொழுது அதனை வெளியிட்டு வருகின்றனர் என்ற குற்ற சாட்டுக்கள் முன் வைக்க படுகின்றன
எனினும் அரசு கூறும் இந்த தகவலை விட உயிர் பலிகள் இரட்டிப்பாக இருக்க கூடும் என்ற கருத்து வலுத்து வருகிறது
மருத்துவமனைகள் தொடர்ந்து நோயாளர்களினால் நிரம்பி வழிகிறது ,பிணங்கள் வைப்பதற்கும் இடம் இன்றி பிரிட்டனிலும்
அரசு தினறி வருகின்ற செய்திகள் தொடராக வெளியாகிய வண்ணம் உள்ளன ,
அது தொடர்பான காட்சி படங்கள் அங்கு பணிபுரியும் நபர்களினால் வெளியிட பட்டு வருகின்றதையும் அவதானிக்க முடிகிறது
கடந்த தினம் பிரிட்டனில் 867 பேர் பலியாகி இருந்தமை இங்கே குறிப்பிட தக்கது,மேலும் நாற்பதாயிரம் பேர் வரும் சில
தினங்களுக்குள் பலியாவர்கள் என பிரபல, தொற்று நோய் ஆராய்ச்சியாளார் தெரிவித்துள்ளார்