பிரான்சில் 10,131 பொலிசாருக்கு கொரனோ – தனிமை படுத்தல் -அதிர்ச்சியில் அரசு
பிரான்சில் முன்னிலையில் பணியாற்றிய காவல் துறையினர் 10,131 பேருக்கு கொரனோ நோயானது உள்ளதான சந்தேகத்தில் தனிமை படுத்த பட்டுள்ளனர் ,
இவர்கள் அனைவரும் மக்கள் பாதுகாப்பு முன் அரணில் பணி புரிந்தவர்கள் ஆவர் .
இவ்வாறு இந்த நோயின் தாக்குதலுக்கு உள்ளான நிலையில் சுமார் 250 பொலிஸார் அடையாளம் காண பட்டு சிகிச்சை வழங்க பட்டு வருகிறது .
இதில் சில டசின் பேர் ஆபத்தான நிலையில் உள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது ,
இவர்களுக்கு அரசு மில்லியன் கணக்கில் முக கவசம் ,மற்றும் கையுறை என்பன வழங்கிய
பொழுதும் இந்த நோயானது பெரும்
தொகையில் உள்ளவர்களுக்கு தொற்றியுள்ளது ,அரசுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
உலகில் அதிக மக்கள் பாதிக்க பட்ட நாடுகளாக அமெரிக்கா ,இத்தாலி ,பிரான்ஸ்,பிரிட்டன் தற்போது இடம் பிடித்துள்ளன
இங்கே அதிக அளவில் உயிர் பலிகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது .
பிரிட்டனில் வரும் மணித்தியாலங்கள் முதல் ,நாட்களில் பல்லாயிரம் மக்கள் பலியாக கூடும் என அஞ்ச படுகிறது
மேலதிக பிரான்ஸ் செய்திகளை தவறாது தினம் பிடிக்க இதில் அழுத்துங்கள்