பல்கலைகழகத்திற்கு தங்களது தோட்டத்தில் இருந்து தெரிவான
மாணவர்களுக்கு தோட்ட இளைஞர்கள் கௌரவிப்பு
நுவரெலியா மாவட்டம் ராகலை பிரதேசத்திற்கு உட்பட்ட ராகலை குரூப் தோட்டத்தில் இருந்து இம்முறை பல்கலைகழகத்திற்கு தெரிவான மாணவர்களை
கௌரவிக்கும் நிகழ்வு தோட்ட இளைஞர்களின் பாரதி கழகத்தின் ஏற்பாட்டில்; பாலர் பாடசாலை மண்டபத்தில் நடைபெற்றது.
இந் நிகழ்விற்கு பிரதம அதிதியாக முன்னால் அமைச்சரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மலையக மக்கள் முன்னணியின் தலைவருமான கலாநிதி
வே.இராதாகிருஸ்ணன் அவர்கள் கலந்துக் கொண்டு பல்கலைகழகத்திற்கு தெரிவான மாணவர்களை கௌரவித்து பதக்கங்கள் வழங்கி கௌரவித்தார்.
இதன் பொழுது பிரதேச சபை உறுப்பினர்கள் கல்விமான்கள் புத்திஜீவிகள் உட்பட் தோட்ட இளைஞர்களும் பொது மக்களும் கலந்துக் கொண்டனர்..