தாயை கொலை செய்த மகள் கைது
கஹவத்தை, வெல்லதுர பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் கழுத்தறுத்து பெண்ணொருவரைக் கொலை செய்த குற்றச்சாட்டில் அவரது மகள் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 13ஆம் திகதி அதிகாலை கூரிய ஆயுதத்தால் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்ட நிலையில் 71 வயதுடைய பெண் ஒருவரின் சடலம் அவரது வீட்டில் இருந்து கண்டு பிடிக்கப்பட்டது.
குறித்த பெண் தனது மகளுடன் வீட்டில் வசித்து வந்ததாகவும், மகள் வீட்டை விட்டு வெளியே சென்ற போதே இந்த கொலை இடம்பெற்றுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது.
தாயை கொலை செய்த மகள் கைது
இந்த சந்தேகத்திற்கிடமான கொலைச் சம்பவம் தொடர்பில் கஹவத்தை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்திருந்த நிலையில் குறித்த பெண்ணின் மகளே இந்த கொலையை செய்துள்ளதாக தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அதன்படி இன்று அதிகாலை 38 வயதான சந்தேக நபரான மகள் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொலைக்கான காரணம் இதுவரை தெரியவராத நிலையில், சம்பவம் தொடர்பில் கஹவத்தை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
வீடியோ
- பட்டப்பகலில் கடத்தப்பட்ட மாணவி
- சஜித்அநுர விவாதத்திற்காக பொது விடுமுறை
- விஜயதாசவுக்கு எதிரான தடை உத்தரவு
- இராணுவத்தினரின் எண்ணிக்கையை குறைக்க அரசுஅவதானம்
- பிரான்ஸ் வீதியில் உணவின்றி தவிக்கும் தமிழ் முதியவர்
- முள்ளிவாய்க்கால் நினைவுதினம் பிரிட்டன் பாராளுமன்றில்
- தனி ஈழம் வெற்றி பெறும்
- கல்விசாரா ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பு
- வாக்கு சேகரிக்க சிலருக்கு பணம்
- LTTE மீதான தடை நீட்டிப்பு