இலங்கையில் –தமிழர் ஆசனங்களை குறைக்கும் நகர்வில் மகிந்தா தீவிரம்
வடகிழக்கு இணைந்த தமிழர் தாயக பகுதியின் பாரளுமன்ற தமிழர் ஆசனங்களை மக்கள் விகிதாசார அடிப்படையில் குறைக்கும் நகர்வில் ஆளும் கோட்டபாய அணியினர் தீவிர கவனம் செலுத்தி வருகின்றனர் .
அதற்கு அமைவாக தமிழர்களின் பல்லை பிடுங்கும் முகமாக இந்த ஆசன குறைப்பு விடயம் அதிரடியாக அறிவிக்க படலாம் என எதிர்பார்க்க படுகிறது .
தமிழர்கள் தனக்கு வாக்கு அளிக்கவில்லை எனவும் சிங்கள மக்கள் வாக்குகளினால் வெற்றி பெற்றுள்ளதாக மார் தட்டும் கோட்டா,மகிந்த அணியினர் இதனை செய்திட துடிப்பதாக தெரியவருகிறது