சவூதி எண்ணெய் கப்பல் மீது ஆள் இல்லா படகு தற்கொலை தாக்குதல்
அரேபிய கடல் பகுதியில் பயணித்து கொண்டிருந்த சவூதி நாட்டின் எண்ணெய் கப்பல் ஒன்றின் மீது திடீர் தாக்குதல் நடத்த பட்டுள்ளது ,குறித்த கப்பலை திடீரென சுற்றிவளைத்த நான்கு படகுகள் .
இதில் ஒன்று ஆள் இல்லாது ரிமோட் கொன்றோல் மூலம் இயங்க வல்லது ,அந்த படகுக்குள் வெடிமருந்துகள் நிரப்ப பட்டு தாக்குதலை
நடத்தியுள்ளதாக தெரிய வந்துள்ளது ,மேற்படி தாக்குதல் சம்பவம் பெரும் அதிரவலைகளை ஏற்படுத்தியுள்ளதுடன் இவை எமன்
கடல்வழி பயணத்திற்கும் ,அரேபிய கப்பல் போக்குவரத்து பாதைக்கும் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது
மேற்படி தாக்குதல் தொடர்பான தீவிர விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன ,இது ஈரான் திட்டமிட்ட தாக்குதலாக இருக்கலாம்
என சந்தேகிக்க படுகிற பொழுதும் அதனை வெளிப்படையாக சவூதி தெரிவிக்கவில்லை
தமது பழிவாங்கும் தாக்குதல் தொடரும் என ஈரான் அறிவித்திருந்தது ,அதன் ஒரு அங்கமாக இதனை பார்க்க முடிகிறது
.