சதுப்பு நிலத்தில் இருந்து உடல் பாகங்கள் கண்டுபிடிப்பு
பமுனுகம, நில்சிரிகம பிரதேசத்தில் சதுப்பு நிலத்தில் இருந்து கொலை செய்யப்பட்ட நபரின் உடல் பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
துடெல்ல பிரதேசத்தைச் சேர்ந்த 34 வயதுடைய ஒருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கடந்த மாதம் 20ஆம் திகதி முதல் குறித்த நபர் காணாமல் போய் இருந்ததாக அவரது மனைவி பொலிஸில் முறைப்பாடு செய்திருந்தார்.
சதுப்பு நிலத்தில் இருந்து உடல் பாகங்கள் கண்டுபிடிப்பு
காணாமல் போன நபருடன் கடைசியாக தொடர்பில் இருந்த ஒருவரை அடையாளம் கண்ட பொலிஸார், அவரை பமுனுகம, போபிட்டிய பிரதேசத்தில் வைத்து சந்தேகத்தின் பேரில் கைது செய்தனர்.
அவரிடம் நடத்திய விசாரணையில் தனிப்பட்ட தகராறு காரணமாக கூரிய ஆயுதத்தால் தாக்கி குறித்த நபரை கொலை செய்துள்ளமை தெரியவந்துள்ளது.
கொலை செய்யப்பட்ட நபரின் உடல் பாகங்கள் நில்சிரிகம சதுப்பு நிலத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ளதுடன், அந்த இடத்தில் பொலிஸ் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட 42 வயதுடைய சந்தேக நபர் வெலிசர நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.
- பிரான்ஸ் வீதியில் உணவின்றி தவிக்கும் தமிழ் முதியவர்
- முள்ளிவாய்க்கால் நினைவுதினம் பிரிட்டன் பாராளுமன்றில்
- தனி ஈழம் வெற்றி பெறும்
- கல்விசாரா ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பு
- வாக்கு சேகரிக்க சிலருக்கு பணம்
- LTTE மீதான தடை நீட்டிப்பு
- கண்டு பிடிக்கப்பட்ட பெண்ணின் சடலம்
- சிசுவை பிரசவித்த மாணவி சிக்கினார்
- பாராளுமன்றில் செல்வராசா கஜேந்திரன் ஆற்றியஉரை