
கொலை சம்பவம் தொடர்பில் 5 பேருக்கு மரண தண்டனை| இலங்கை செய்திகள்
இலங்கை செய்திகள் |கேகாலை மாகாண மேல் நீதிமன்றத்தில் இன்று (08) குற்றம் சாட்டப்பட்ட ஐந்து பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
03.07.2014 அன்று கேகாலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தெவலகம, கஹகல்ல பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் இடம்பெற்ற விருந்தின் போது சீமெந்து கல்லால் தாக்கி நபர் ஒருவரைக் கொலை செய்ததாக அவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.
கேகாலை மாகாண மேல் நீதிமன்ற நீதிபதி ஜயகி டி அல்விஸ் இந்த உத்தரவை பிறப்பித்தார்.