கொரனோவுக்கு விதானையார் ஐவர் மரணம்
கொரோனா தொற்றுக்குள்ளாகி இதுவரை 5 கிராம உத்தியோகத்தர்கள் உயிரிழந்துள்ளனர் என
இலங்கை கிராம உத்தியோகத்தர்கள் சங்கத்தின் தலைவர் சுமித் கொடிகார தெரிவித்துள்ளார்.
அத்துடன், 500க்கு மேற்பட்ட கிராம உத்தியோகத்தர்கள் தொற்றுக்கு உள்ளாகி உள்ளனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
கொரோனா பரவலுக்கு மத்தியில், பாரிய அர்ப்பணிப்புடன் கடமையாற்றும் சுமார 14,000க்கும்
அதிகமான கிராம உத்தியோகத்தர்கள் எவ்வித மேலதிக கொடுப்பனவுகள் இன்றி கடமையாற்றி வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.