காருக்குள் நுழைந்த பாம்பு – மரணத்தில் இருந்து தப்பிய சாரதி
அவுஸ்ரேலியா கியூன்லாந் பகுதியில் நபர் ஒருவர் வழமை போல தனது
காரில் பயணிக்க முயன்றுள்ளார் .அவ்வேளை காருக்குள் இருந்து சீறும் சத்தம் கேட்டு மிரண்டு போனார் .
சத்தம் வரும் திசை நோக்கி அதனை ஆராய்ந்த பொழுது காரின் முன்
சேமிப்பு பெட்டிக்குள் இருந்து மிக கொடிய விச பாம்பு ஒன்று இருந்துள்ளமை கண்டு பிடிக்க பட்டுள்ளது
பதறி போன அவர் பாம்பு பிடி நபர்களுக்கு அழைப்பை மேற்கொண்டு ,பாம்பை பிடித்துள்ளார்
மேற்படி காட்சி பேஸ்புக் சமூக வலைதளத்தில் வைராலகிய வண்ணம் உள்ளது ,இது போன்ற நிகழ்வுகள் நாள்தோறும்
அவுஸ்ரேலியாவில் இடம்பெற்ற வண்ணம் உள்ளமை மக்களை மிரள வைத்துள்ளது
வெப்ப வலய நாடுகளில் பாம்புகளின் தொல்லை அதிகரித்து காணப்படுகின்றமை குறிப்பிட தக்கது