ஐக்கிய நாடுகள் சபையில் பெரும் நெருக்கடி ஏற்படும் இலங்கை
ஐக்கிய நாடுகள் மனித உரிமை அவையின் 43 ஆவது கூட்ட தொடரில் இலங்கை பெரும் சவால்களை எதிர்கொள்ள வேண்டி வரும் என அரசு அறிவித்துள்ளது .
இறுதி போரில் போர்குற்றங்களி புரிந்து ஆட்சியில் அமர்ந்துள்ள அரசு முதன் முறையாக நேரடியாக இந்த எதிர்ப்பை சந்திக்க உள்ளது ,
அதனை அடுத்தே இம்முறை பெரும் நெருக்கடி நிறைந்த ஒன்றாக இது அமையும் எனவும் ,
இலங்கைக்கு ஐக்கிய நாடுகள் மனித உரிமை அவையில் மேலும் கால அவகாசம் வழங்கும் நிகழ்வுகள் அங்கு இடம்பெறுவது கடினம் என இலங்கை முக்கிய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார் .
ஐக்கிய நாடுகள் மனித உரிமை அவையில் கடந்த ஆட்சியில் பொறுப்பு கூறலுக்கு பதில் கூற தவறியதன் விளைவே இந்த நெருக்கடி ஏற்பட காரணமாக அமைந்துள்ளது