அப்பாவி மக்களை குண்டு வைத்து கொல்லும் இலங்கை இனவாத அரசு photo
இன்று பிரித்தானியாவில் உள்ள இலங்கை தூதரகத்துக்கு முன்னால், மதியம் 12 :30 மணியளவில்
,தமிழருக்கான சுதந்திர வேட்டைகாரர்களால் போராட்டம் ஒன்று நடத்த பட்டது
இவை நிகழ்கால கொரனோ விதிகளுக்கமையவும் , பிரித்தானிய சட்ட திட்டங்களை பின்பற்றியும் அமைதியான முறையில் அர்ப்பாட்டம் நடைபெற்றது .
இந்த போராட்டத்தின் பொழுது மறைந்து இருந்து குண்டு வெடிப்பு தாக்குதல்களை
மேற்கொள்ளும் இலங்கை இனவாத அரசின் முகதிரையை ஆர்ப்பாட்ட காரர்கள் கோஷமிட்டு கிழித்தெறிந்தனர்
.அதனை உயர்ஸ்தாணிகத்திற்குள் உள்ளே இருந்த வண்ணம் சிங்கள கூலிகள் அவதானித்துக்கொண்டிருத்தனர் ,
மறைந்திருந்து முழு ஆர்ப் பாட்ட நிகழ்வையும் காணொளி ,மற்றும் புகைப்படங்கள்
பிடித்து கொண்டிருந்ததை பங்கு பற்றியவர்கள் கண்கொண்டு பார்க்க கூடியதாக இருந்தது .
மேலும் இவ் ஆர்ப்பாட்ட பேரணியில்
ஈஸ்டர் பண்டிகையின் போது தேவாலயங்களில் குண்டுவைத்து தீவிரவாத தாக்குதல் என்ற
போர்வைக்குள் கொல்லப்பட்ட அப்பாவி மக்களின் கொலைக்கு இன்னும் ஏன் நீதி வழங்கப்படவில்லை என இலங்கை இனவாத அரசை பொங்கியெழுந்து கேட்டனர் .
இந்த பேரணியில் கீழே வரும் கோஷங்கள் முழங்கின ,
“போர்க்குற்றவாளி இலங்கஅதிபர்”
“ஈஸ்ரர் குண்டு தாக்குதலுக்கு விசாரணை முடிவு என்ன”
“அப்பாவி மக்களை மறந்து இருந்து குண்டு வைத்து கொல்லாதே”
“இலங்கையை விட்டு ஏன் சிங்களவர் வெளியேறுகிறார்கள் “
என்ற கேள்வி கோஷங்களை எழுப்பினர் …
இணையில் தொடபாற் மனித உரிமை மீறல் மற்றும் தமிழர் அடக்குமுறை என்பன தலைவிரித்தாடி வரும் நிலையில், மர்ம படுகொலைகள் ,கடத்தல்கள் ,அச்சறுத்தல்கள் ,என்பன
தொடர்ந்த வண்ணம் உள்ளது ஐநா மனித உரிமை மையம் சுட்டி காட்டி இருந்தமை இங்கே குறிப்பிட தக்கது