எதிர்க்கட்சித் தலைவர் நோன்புப் பெருநாள் வாழ்த்து

ரணில் சஜித் மோதல் நாடகம்
Spread the love

எதிர்க்கட்சித் தலைவர் நோன்புப் பெருநாள் வாழ்த்து

நல்லிணக்கத்துடனும் ஒற்றுமையுடனும் ஒரு புதிய இலங்கையை உருவாக்குவோம் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவர் விடுத்துள்ள நோன்புப் பெருநாள் வாழ்த்துச் செய்தியிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். வாழ்த்துச் செய்தியில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,

ரமழான் மாதத்தில் நோன்பு நோற்பதன் மூலம் இறைவனுக்கும் அடியானுக்கும் இடையே நெருங்கிய உறவை ஏற்படுத்த ஒரு தனித்துவமான வாய்ப்பை உருவாக்கி அதன் மூலம் உயர்ந்த மனித நற்பண்புகள் மற்றும் ஒழுக்க விழுமியங்களின் மதிப்பை எடுத்துரைப்பது மிகவும் பாராட்டத்தக்கது.

பரஸ்பர நல்லிணக்கத்துடனும், மனிதாபிமான நெருக்கத்துடனும் நாம் நடந்து கொண்டால்,உலகம் இதனைவிட மிகவும் அமைதியானதாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

எதிர்க்கட்சித் தலைவர் நோன்புப் பெருநாள் வாழ்த்து

பரோபகார அடிப்படையில் சமூகத்தில் வசதியுள்ளோர் இல்லாதோர் இடைவெளியைக் குறைத்து அனைவருக்கும் சகோதரத்துவ கரங்களை நீட்டும் ஒரு வாய்ப்பாகவும் இந்த பெருநாளைக் குறிப்பிடலாம்.

நல்லிணக்கத்துடனும் ஒற்றுமையுடனும் ஒரு புதிய இலங்கையை உருவாக்க இவ்வாறான கலாசார,சமய நிகழ்வுகள் மூலம் கிடைக்கின்ற ஆதரவு அளப்பரியது.குறிப்பாக பல்லாண்டு காலம் இந்நாட்டு சகோதர முஸ்லிம் மக்கள் தாய்நாட்டின் முன்னேற்றத்திற்கு பெரும் பங்களிப்பை வழங்கியுள்ளதுடன், இலங்கையின் அடையாளத்தில் முஸ்லிம் சகோதரர்களும் பங்குதாரர்களாவர்.

அதனை நாம் மிகுந்த மரியாதையுடன் நினைவு கூர்வதுடன்,மனித குலத்தின் முன்னேற்றத்திற்கும் நல்லிணக்கப் பாதைக்கும் துணிச்சலுடன் உழைக்க வேண்டியதன் அவசியத்தை மீண்டும் மீண்டும் நினைவு கூர்வோம் என்று தெரிவித்துள்ளார்.