பெண்ணிடம் லஞ்சம் வாங்கிய நீதிபதி கைது
பெண்ணிடம் லஞ்சம் வாங்கிய நீதிபதி கைது இலஞ்சம் அல்லது ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகளால், புத்தளம் காதி நீதிமன்ற நீதிபதி ஒருவர், ரூ. 5,000 லஞ்சம் பெற்ற குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.
நீதிபதி கைது
புத்தளம் வெத்தளை பிரதேசத்தை சேர்ந்த ஒருவரின் முறைப்பாட்டையடுத்து இந்த கைது இடம்பெற்றுள்ளது.
நீதிமன்றத் தீர்ப்பு தொடர்பான விவாகரத்துச் சான்றிதழை வழங்குவதற்காக, குறித்த நீதிபதி ஒரு பெண்ணிடம் லஞ்சம் கேட்டதாகக் கூறப்படுகிறது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் புத்தளம் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு எதிர்வரும் மே மாதம் 6ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.