பறக்கும் படை வேட்டை – 375 பேர் கைது
நாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்பட்டிருக்கும் தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் மற்றும் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறியோர் தொடர்பிலான விபரங்களுடன் பொலிஸ் தலைமையகத்தின் ஊடகப் பிரிவு அறிக்கையொன்றை அனுப்பிவைத்துள்ளது.
அதில்,
தனிமைப்படுது்தல் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டின் கீழ், இதுவரையிலும் 67,342 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
24 மணிநேரத்தில்
செப்டெம்பர் 7 ஆம் திகதி காலை 6 மணிமுதல் செப்டெம்பர் 8 ஆம் திகதி காலை 6 மணிக்கு நிறைவடைந்த 24 மணிநேரத்தில் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டின் கீழ்.
கைதானவர்களின் எண்ணிக்கை -675
கைப்பற்றப்பட்ட வாகனங்கள்- 42
சோதனைச் சாவடிகளில்
மேல் மாகாணத்தில் இருந்து வேறு மாகாணங்களுக்குள் நுழையும் இடங்களில் அமைக்கப்பட்டுள்ள 13 வீதிச் சோதனை சாவடிகளில் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகள்.
மேல் மாகாணத்திலிருந்து வெளியேறிபோது சோதனை செய்யப்பட்ட விவரம்
வாகனங்கள் -812
நபர்கள்- 1,206