எம்.கே.சிவாஜிலிங்கம் இன்று (28) பயங்கரவாத விசாரணை பிரிவிற்கு அழைக்கப்பட்டுள்ளார்.
அதற்கமைய இன்று காலை 9.30 க்கு பயங்கரவாத விசாரணை பிரிவிற்கு அழைக்கப்பட்டுள்ளதாக சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.
கடந்த மே மாதம் முல்லைத்தீவு வெல்லாமுள்ளிவாய்க்கால் பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்று தொடர்பான விசாரணைகளுக்கே அவர் அழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.