கிளிநொச்சியில் ஆலயத்தில் சடலம் மீட்பு
கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட செல்வாநகர் ஐயப்பன் கோவில் மண்டபத்தில்
ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
குறித்த நபர் கிளிநொச்சியை சேர்ந்த 43 வயதுடைய லாலசிங்கம் சங்கர் என்ற 2
பிள்ளைகளின் தந்தையான வர்த்தகர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
குறித்த மரணம் தொடர்பாக கிளிநொச்சி பொலிஸார் பல்வேறு கோணங்களில்
விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.