இஸ்ரேல் தாக்குதலில் 30 000 பாலஸ்தீன காசா மக்கள் பலி
இஸ்ரேல் இராணுவ தாக்குதலில் 30 000 பாலஸ்தீன காசா மக்கள் பலியாகியுள்ளதாக காசா சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது .
பாலஸ்தீனம் காசா நகரம் மீது இஸ்ரேல் இராணுவம் தொடர் தாக்குதலை நடத்தி அந்த பகுதியை சுடுகாடாக்கியுள்ளது .
அகதிகளாக பொது இடங்களில் தங்கியுள்ள அப்பாவி காசா மக்கள் மீது வலிந்து தாக்குதலை நடத்தி அந்த மக்களை படுகொலை புரிந்து வருகிறது .
காசா மீது இஸ்ரேல் புரிந்தது இனப்படுகொலை என சர்வதேச நீதிமன்றில் வழக்கு தொடுக்க பட்டு தீர்ப்பு வெளியாக காத்துள்ள இவ்வேளை ,தொடர்ந்தும் தனது படுகொலையை இஸ்ரேல் நடத்திய வண்ணம் உள்ளமை இங்கே குறிப்பிட தக்கது .