கோட்டா வழியில் செல்கிறார் ரணில்
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தேர்தல் வாக்குகளுக்காக இஸ்லாமிய நாடுகளை பகைத்துக் கொண்டதனால் ஜெனிவா கூட்டத்தொடரில் இஸ்லாமிய நாடுகள் இலங்கைக்கு சார்பாக
வாக்களிக்கவில்லை.தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும் அவ்வாறே செயற்படுகிறார்.ஜெனிவாவுக்கு ஒன்றை கூறுகின்றார் ,நாட்டில்
பிறிதொன்று செயற்படுத்தப்படுகிறது. சர்வதேச சமூகம் முட்டாள்கள் அல்ல என்பதை விளங்கிக்கொள்ள வேண்டுமென ஐக்கிய மக்கள் சக்தி எம்.பி.யான நிரோஷான் பெரேரா தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (07) இடம்பெற்ற 2024 ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுத்திட்டத்தில் வெளிநாட்டலுவல்கள் அமைச்சு, தொழில் மற்றும்
கோட்டா வழியில் செல்கிறார் ரணில்
வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் செலவுத்தலைப்பு மீதான விவாதத்தில் உரையாற்றும்போதே இவ்வாறு தெரிவித்தார்.
அமெரிக்காவுக்கான முன்னாள் இலங்கை தூதுவர் சாலிய விக்கிரமசூரிய மீது 3 இலட்சத்து 3227 அமெரிக்க டொலர் நிதி மோசடி குற்றச்சாட்டு
முன்வைக்கப்பட்டு அவருக்கு அமெரிக்க வொஷிங்டன் நீதிமன்றத்தில் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இவரை பாதுகாப்பதற்கு முன்னாள்
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அரசாங்கம் இராஜாதந்திர மட்டத்தில் எடுத்த நடவடிக்கைகள் தோல்வியடைந்தன.
ஆனால் இவருக்கு எதிராக இலங்கையில் முறையாக சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை.
இலங்கையின் அரச தலைவர்கள் மோசடி செய்த நிதி சாலிய விக்கிரமசூரிய ஊடாக வெளிநாடுகளில் பதுக்கி வைத்துள்ள விவகாரம் தொடர்பில்
அமெரிக்காவில் எப்.பி.ஐ.நடவடிக்கை எடுத்த போதும் அதற்கு இலங்கை ஒத்துழைப்பு வழங்காத காரணத்தால் அந்த முயற்சிகள் வெற்றி பெறவில்லை என்றார்.
- விவசாயத்துறையை நவீனமயப்படுத்துவதற்காக 100 மில்லியன்
- வீடுஒன்றில் பெண்ணின் சடலம் மீட்பு
- யாழ்ப்பாணத்தில் அதிகவெப்பம் ஐவர் உயிரிழப்பு
- பெற்றோரின் எதிர்ப்பை மீறி திருமணம்
- அரசாங்கத்தின் செயலை தோற்கடிக்க வேண்டும்
- வித்தியா விசாரணையிலிருந்து விலகிய நீதியரசர்
- கை கால்கள் கட்டப்பட்டு பெண் கொலை
- இலங்கை கல்வி முறை மாற்றத்திற்கு சீனா அரசு உடன்பாடு
- வேப்பமரத்தில் தொங்கிய மனித சடலம்
- சாலை விபத்துக்களில் 4பேர் பலி
- வவுனியாவில் டிக்டாக் ரசானை கைது செய்யக்கோரி போராட்டம்
- அதிகாரிகளை அடைத்த பட்டதாரிகள் கைது