பருத்தித்துறையை வந்தடைந்தத பேரணி
மீனவர்களின் வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்தக் கோரி, முல்லைத்தீவில், இன்று காலை ஆரம்பித்த படகு பேரணி, பருத்தித்துறை துறைமுகத்தை வந்தடைந்தது.
முல்லைத்தீவு – கள்ளப்பாடு கடற்கரையில், இன்று காலை 7.15 மணியளவில் ஆரம்பித்த கடல் வழியான கண்டனப் படகு பேரணி, யாழ்ப்பாணம் – பருத்தித்துறை துறைமுகத்தை இன்று காலை 9.30 மணியளவில் வந்தடைந்தது.
நூற்றுக்கும் மேற்பட்ட படகுகளில், அரசியல் பிரமுகர்கள் உட்பட பலரும் பேரணியாக பருத்தித்துறை துறைமுகத்தை வந்தடைந்தனர்.
இதன் பின்னர், அங்கு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.